Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கோட்டை நீதிமன்றத்தில் (லோக்அதாலத்) தேசிய மக்கள் நீதிமன்ற சட்டவிழிப்புணா்வு முகாம்.

பிப்ரவரி 10, 2023 06:43

செங்கோட்டை : செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வைத்து வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் செங்கோட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் காசோலை மற்றும் ஜீவனாம்சம் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக முடிப்பது குறித்து வழக்காடிகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது.

முகாமிற்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதித்துறை நடுவரும் நீதிமன்ற நீதிபதியுமான சுனில்ராஜா தலைமைதாங்கினார். வழக்கறிஞா்கள் சங்க நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, மூா்த்தி, சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலைவகித்தனா். வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

முகாமில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத காசோலை மற்றும் ஜீவனாம்சம், பாகபிரிவினை  வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக தீரத்து வைப்பது குறித்து விளக்கவுரை அளிக்கப்பட்டது.

முகாமில் வழக்கறிஞா்கள் மாரியப்பன், சக்திவேல், வெங்கடேஷ், நித்யானந்தம், பழனிக்குமார், வீரபாண்டியன், சிவசுந்தரமூர்த்தி, இந்திரா, பாத்திமா கலிலா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தலைப்புச்செய்திகள்